Tamilnadu
''வச்சு செய்ய போகுது'' : நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும் - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும்.
நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !