Tamilnadu
"உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான திட்டமே அ.தி.மு.க அரசிடம் இல்லை” - மா.சுப்பிரமணியன் MLA பேச்சு!
சைதாப்பேட்டை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோட்டூர்புரம் சித்ரா நகர் பழைய காவல் நிலையம் எதிரில் ரூபாய் 23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய ரேசன் கடைகளை இன்று காலை தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்திற்கு உட்பட்ட, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரம் பகுதியில், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சுப்ரமணியனின் 2018- 19ம் ஆண்டிற்கான மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்த நியாய விலைக் கடை கட்டிரம் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் பேட்டியளித்த சைதாப்பேட்டை தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், “உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான எந்தவித ஏற்பாடுகளையும் தற்போதைய தமிழக அரசு இதுவரை செய்யவில்லை.
புதிது புதிதாக மாவட்டங்களையும் மாநகராட்சிகளையும் உருவாக்கும் பணியை மேற்கொண்டிருக்கக்கூடிய அ.தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தலை எப்படி நடத்தப்போகிறது என்ற திட்டமிடல் இல்லாமல் இருக்கிறது.
இந்தப் பிரச்னையை தற்போதைய அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை எப்போது எப்படி நடத்த திட்டமிட்டு இருந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க தயாராகவே இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!