Tamilnadu
“கலைஞரின் நன்மதிப்பு பெற்ற பத்திரிகையாளர் டாயல்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
தமிழ் பத்திரிகை உலகில் மிகநெடிய அனுபவம்மிக்க மூத்த ஊடகவியலாளர் டாயல் மறைந்தது பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், “தமிழகத்தின் மிக மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான டாயல் மறைவு தமிழ்ப் பத்திரிகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்!
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் கோலோச்சியவர்.
தினத்தூது, தினசரி, மாலை முரசு, மணிச்சுடர் என பல்வேறு நாளிதழ்களில் பணியாற்றியவர். அதன் பிறகு தொலைக்காட்சி ஊடகத்திற்கு வந்தார். 2007ல் ’கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக இணைந்து 2017 வரை சிறப்பாகப் பணியாற்றினார். அந்தக் காலக்கட்டத்தில் அவரை முழுமையாக அறிந்தேன். மிகச்சிறந்த ஊடகவியலாளராக அவர் செயல்பட்டார்.
தலைவர் கலைஞர் அவர்கள் ‘நெஞ்சுக்கு நீதி’யில் தனக்குப் பிடித்த பத்திரிகையாளர்களுள் ஒருவர் என, டாயல் அவர்களது பெயரைக் குறிப்பிட்டுள்ளார். தமிழக பத்திரிகையுலகம் ஒரு நல்ல பத்திரிகையாளரை இழந்துள்ளது
பத்திரிகைத் துறைக்கு முன்னதாக திரைத்துறையிலும் இருந்துள்ளார். இப்படி பன்முக ஆற்றல் பெற்றவராக இருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஊடகத் துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?” : பதிலளிக்க ED-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
“Covishield தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படும்” - மருந்து நிறுவனத்தின் அறிவிப்பால் ஷாக் - பின்னணி என்ன?
-
”மோடி தொடர்ந்து பேச பேச பாஜக படுதோல்வி அடைவது உறுதி” : செல்வப்பெருந்தகை!
-
பாலியல் புகார் : பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!
-
”போலி வீடியோக்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சி பா.ஜ.க” : மல்லிகார்ஜூன கார்கே பதிலடி!