Tamilnadu
நடிகர் செந்திலின் வீட்டை வாடகைக்கு வாங்கி மோசடி... சினிமா புரொடக்ஷன் மேனேஜர் கைது!
சென்னை சாலிகிராமத்தில் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. அந்தக் கட்டடத்தில் மொத்தமுள்ள 10 அறைகளையும் கடந்த 2013ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (52) என்பவர் மாதம் ரூபாய் இரண்டரை லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து சர்வீஸ் அப்பார்ட்மென்ட் நடத்தி வந்தார்.
சகாயராஜ் சினிமா துறையில் புரொடக்சன் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை தராமல் தொடர்ந்து காலம்தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த செந்தில் வீட்டை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அப்போது, செந்திலின் கட்டடத்தை தனது சொந்தக் கட்டடம் எனக் கூறி, அதில் 7 அறைகளை சகாயராஜ் ‘லீஸ்’ மற்றும் வாடகைக்கு விட்டு ஓப்பந்தம் போட்டு பலரிடம் பணம் பெற்றுள்ளது தெரியவந்தது .
இதையடுத்து, செந்தில் விருகம்பாக்கம் போலிஸில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலிஸார் சகாயராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !