Tamilnadu
நடிகர் செந்திலின் வீட்டை வாடகைக்கு வாங்கி மோசடி... சினிமா புரொடக்ஷன் மேனேஜர் கைது!
சென்னை சாலிகிராமத்தில் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. அந்தக் கட்டடத்தில் மொத்தமுள்ள 10 அறைகளையும் கடந்த 2013ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (52) என்பவர் மாதம் ரூபாய் இரண்டரை லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து சர்வீஸ் அப்பார்ட்மென்ட் நடத்தி வந்தார்.
சகாயராஜ் சினிமா துறையில் புரொடக்சன் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை தராமல் தொடர்ந்து காலம்தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த செந்தில் வீட்டை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அப்போது, செந்திலின் கட்டடத்தை தனது சொந்தக் கட்டடம் எனக் கூறி, அதில் 7 அறைகளை சகாயராஜ் ‘லீஸ்’ மற்றும் வாடகைக்கு விட்டு ஓப்பந்தம் போட்டு பலரிடம் பணம் பெற்றுள்ளது தெரியவந்தது .
இதையடுத்து, செந்தில் விருகம்பாக்கம் போலிஸில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலிஸார் சகாயராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!