Tamilnadu
''அறுத்து விடுவேன்'' - கல்லூரிக்குள் புகுந்து முதல்வரை மிரட்டிய முன்னாள் மாணவர் : அதிர்ச்சி வீடியோ !
கும்பகோணம் அருகில் உள்ள கொட்டையூர் அரசு கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் அருளரசன். அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சிவபாலன், கல்லூரிக்குள் நுழைந்து கல்லூரி முதல்வர் அருளரசனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சிவபாலன், கல்லூரியில் கோச்சிங் வகுப்புகளை தடைசெய்ய வேண்டும் என்றும், மாணவர்கள் யாரும் தன்னைப்போல் வரைவதில்லை. தன்னைப்போன்று யாராலும் வரைந்து காட்ட முடியாது என்றும் கல்லூரி முதல்வர் அருளரசனை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்.
இதுதொடர்பாக, கல்லூரி முதல்வர் அருளரசன் சுவாமிமலை போலிஸில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவர்களில் கூறுகையில், “கல்லூரிக்குள் புகுந்து முதல்வரை மிரட்டிய ஓவியர் சிவபாலன், தனியாக கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார். இவர் தனக்கு கல்லூரியில் ஓவிய ஆசிரியர் வேலை கிடைக்காத விரக்தியில் குடித்துவிட்டு வந்து அடிக்கடி இதுபோன்று அநாகரீகமாக நடந்துகொள்வார்.
சம்பவத்தன்று பெண் பேராசிரியர் ஒருவர் முன்னிலையிலேயே தகாத வார்த்தைகளைக் கூறி முதல்வரை மிரட்டினார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது” எனக் கூறினர்.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!