Tamilnadu
’கொடைக்கானலுக்கு இப்போது செல்ல வேண்டாம்’ - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை !
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மலை தொடர்ந்து பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு பெய்த கனமழையினால் மலை சாலையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்ட பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டடன.
தொடர் கனமழையால் கொடைக்கானலில் உள்ள கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பார்க், ரோஜா பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.
மலைச்சாலையில் தொடர்ந்து மரங்கள் முறிந்து விழுவதால் சுற்றுலா பயணிகள் மலைச்சாலையில் கவனமாக வருமாறு வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால் கொடைக்கானல் வருவதை தவிர்க்குமாறும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!