Tamilnadu
சென்னை மெட்ரோவில் 50% கட்டணச் சலுகை - பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய அறிவிப்பு!
நாடு முழுவதும் வரும் 27-ம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் தீபாவளி கொண்டாட்டம் நெருங்கி வரும் வேலையில் சென்னையில் உள்ள பலர் தங்கள் ஊருக்கு செல்ல தயாரகிவருகின்றனர்.
முன்னதாக தீபாவளிக்கு 26 மற்றும் 27 தேதிகளில் மட்டுமே விடுமுறை இருந்தநாளில் தற்போது 28-ம் தேதியும் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு.
தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்துறையும் கூடுதல் பேருந்து இயக்கப்படும் வேலையில், சென்னை மெட்ரோவில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு 50 சதவித கட்டண சலுகை அளிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இனி வரும் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும், அரசு பொது விடுமுறை நாட்களிலும் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!