Tamilnadu
சென்னை மெட்ரோவில் 50% கட்டணச் சலுகை - பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய அறிவிப்பு!
நாடு முழுவதும் வரும் 27-ம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் தீபாவளி கொண்டாட்டம் நெருங்கி வரும் வேலையில் சென்னையில் உள்ள பலர் தங்கள் ஊருக்கு செல்ல தயாரகிவருகின்றனர்.
முன்னதாக தீபாவளிக்கு 26 மற்றும் 27 தேதிகளில் மட்டுமே விடுமுறை இருந்தநாளில் தற்போது 28-ம் தேதியும் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு.
தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்துறையும் கூடுதல் பேருந்து இயக்கப்படும் வேலையில், சென்னை மெட்ரோவில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு 50 சதவித கட்டண சலுகை அளிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இனி வரும் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும், அரசு பொது விடுமுறை நாட்களிலும் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!