Tamilnadu
புரட்டாசி மாதம் நிறைவு... டல் அடித்த இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... (ஆல்பம்)
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் வீட்டிலும், வெளியிலும் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்த்ததால், மீன், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிகளை விற்பனை திண்டாட்டமானது.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமையுடன் புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் அசைவ பிரியர்கள் குஷியடைந்துள்ளனர். ஆகவே இன்று ஞாயிற்று கிழமை என்பதால் இறைச்சி வாங்குவதற்காக கடைகளில் முண்டியடித்து குழந்தைகள், இளைஞர்கள் முதற்கொண்டு சென்றனர்.
இன்று காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தபோதும், அதனை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்குவதற்காக காசிமேடு துறைமுகத்தில் தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், எண்ணூர் பகுதி மக்கள் கூடினர்.
புரட்டாசி முடிந்ததால் மக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் திருப்தியடைந்துள்ளனர். இன்று அதிக மீன்கள் விற்பனையாகும் என்ற நோக்கில் விசைப்படகுகள், பைபர் படகுகளில் கடலில் நெடுந்தூரம் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர்.
அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கியதால் வஞ்சிரம் கிலோவுக்கு 700 ரூபாய்க்கும், வவ்வால் 450, ஷீலா 300, இறால் 300, நண்டு 200, சங்கரா 200 ரூபாய் என மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.
மழை பெய்தபோதும் மீன் வாங்க வந்த மக்கள் விலை அதிகரித்துள்ளதை கண்டு சிறிய ரக மீன்களையே வாங்கிச் சென்றதாக விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்தனர். அதேபோல், சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
Also Read
-
தமிழ்நாட்டின் வரலாற்றில் மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத சூழல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு... குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை... மகளிர் நீதிமன்றம் அதிரடி!
-
இவ்வளவு வசதிகளா... தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்த உயர் சிறப்பு மருத்துவமனை!
-
மகளிர் தினம் : “தமிழ்நாட்டோட இலட்சிய கனவை நீங்கதான் நிறைவேற்ற போறீங்க..” - முதலமைச்சர் சொன்ன செய்தி!
-
சீனாவிடம் செய்த தவறை இந்தியாவிடம் செய்ய மாட்டோம்… இந்தியாவிற்கே வந்து மிரட்டிச் சென்ற அமெரிக்கா!