Tamilnadu
இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பரப்புரை: வாக்காளர் அல்லாதோர் வெளியேற தேர்தல் அதிகாரி உத்தரவு!
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் காமராஜர் நகர் ஆகிய காலியாக உள்ளத் சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற அக்.,21ன் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
திமுக சார்பில் விக்கிரவாண்டியில் நா.புகழேந்தியும், நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் வேட்பாளராக களத்தில் உள்ளனர். அதேபோல் புதுச்சேரி காமராஜர் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் போட்டியிடுகிறார்.
இந்த மூன்றுத் தொகுதிகளிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் திமுக முன்னோடிகளும், கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு இன்று மாலை 6 மணிக்குள் நிறைவடைகிறது என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்துள்ளார். இதையடுத்து, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளியூரைச் சேர்ந்த வாக்காளர்கள் அல்லாத நபர்கள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
“ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிப்பு” : சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசு : மெட்ரோ முதல் நிதிப்பகிர்வு வரை பெரும் ஏமாற்றம்!
-
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை - ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“சென்னையில் ஓமந்தூர் ராமாசாமிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க அருகதை இருக்கிறதா? : பழனிசாமிக்கு அமைச்சர் MRK கேள்வி!