Tamilnadu
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படாது : தென்னக ரயில்வே அறிவிப்பு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக அக்., 10 முதல் டிச., 7 வரை நெல்லை மற்றும் பொதிகை அதிவிரைவு ரயில்கள் எழும்பூர் வரை செல்லாது என்றும் தாம்பரத்தில் இருந்தே மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அடுத்து வரும் சில மாதங்களுக்கு தீபாவளி உட்பட பல பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஏற்கெனவே முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு எழும்பூர் வரை நெல்லை, பொதிகை ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!