Tamilnadu
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படாது : தென்னக ரயில்வே அறிவிப்பு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக அக்., 10 முதல் டிச., 7 வரை நெல்லை மற்றும் பொதிகை அதிவிரைவு ரயில்கள் எழும்பூர் வரை செல்லாது என்றும் தாம்பரத்தில் இருந்தே மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அடுத்து வரும் சில மாதங்களுக்கு தீபாவளி உட்பட பல பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஏற்கெனவே முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு எழும்பூர் வரை நெல்லை, பொதிகை ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!