Tamilnadu
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படாது : தென்னக ரயில்வே அறிவிப்பு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக அக்., 10 முதல் டிச., 7 வரை நெல்லை மற்றும் பொதிகை அதிவிரைவு ரயில்கள் எழும்பூர் வரை செல்லாது என்றும் தாம்பரத்தில் இருந்தே மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அடுத்து வரும் சில மாதங்களுக்கு தீபாவளி உட்பட பல பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஏற்கெனவே முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு எழும்பூர் வரை நெல்லை, பொதிகை ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!