Tamilnadu
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படாது : தென்னக ரயில்வே அறிவிப்பு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக அக்., 10 முதல் டிச., 7 வரை நெல்லை மற்றும் பொதிகை அதிவிரைவு ரயில்கள் எழும்பூர் வரை செல்லாது என்றும் தாம்பரத்தில் இருந்தே மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அடுத்து வரும் சில மாதங்களுக்கு தீபாவளி உட்பட பல பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஏற்கெனவே முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு எழும்பூர் வரை நெல்லை, பொதிகை ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!