Tamilnadu
“பேனர் விவகாரத்தில் காத்து மேல தான் கேஸ் போடணும்” - அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் எகிடுதகிடு பேச்சு!
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஐ.டி.ஊழியர் சுபஸ்ரீ, சட்டவிரோதமாக அ.தி.மு.க-வினர் சாலையில் வைத்த பேனர் விழுந்த விபத்தில் பலியான விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து சுபஸ்ரீ உயிரிழப்புக்குக் காரணமான பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முக்கிய குற்றவாளி முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரனை போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால், ஜெயகோபால் தலைமறைவானதால் போலிஸார் தொடர்ந்து தேடி வருவதாகக் கூறப்பட்டது. எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் அரசு மற்றும் போலிஸாரின் மெத்தனப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் ஜெயகோபால்.
சட்டவிரோத பேனரால், இளம்பெண் பாலியான நிகழ்வையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினரும், இனி பேனர் வைக்கமாட்டோம் என உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். ஆனால், ஆளும் அ.தி.மு.க-வோ இதுகுறித்து வருத்தமும் தெரிவிக்கவில்லை. பேனர் வைக்கக்கூடாது என தொண்டர்களுக்கு உத்தரவிடவும் இல்லை.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேனர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் பொன்னையன், “காற்றடித்துத்தான் பேனர் விழுந்தது. பேனர் வைத்தவர் வேண்டுமென்றே போய் பேனரை தள்ளிவிட்டு கொல்லவில்லை. வழக்குப் பதிவு செய்வதென்றால் காற்றின் மீது தான் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் இந்த அலட்சியப் பேச்சு சமூக வலைதளவாசிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய குற்றவாளி தனது கட்சிக்காரர் என்பதற்காக எந்தளவுக்கும் இறங்கிப் பேசும் நிலைக்கு வந்திருக்கும் பொன்னையனை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!