Tamilnadu
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க... எளிதாக ‘நிலவேம்பு குடிநீர்’ தயாரிப்பது எப்படி? #HealthTips #Dengue
டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்களை நம்மால் அழிக்க முடியாமல் போனாலும், டெங்கு நம் உடலைத் தாக்காதபடி தடுப்பு முறைகளை மேற்கொண்டாலே போதும். டெங்கு வராமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
உங்களது ஊரில் உள்ள சித்த மருந்தகத்தில், நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் பொடி கிடைக்கும். அதை வாங்கிக் குடிக்கலாம். அல்லது நீங்களே தயாரிக்கவும் செய்யலாம். டெங்கு காய்ச்சல் மற்றும் மற்ற காய்ச்சல் வராமல் இருக்கவும் இந்தக் குடிநீரை அருந்தலாம்.
தேவை : நிலவேம்பு குடிநீர் தயாரிப்பது எப்படி எனப் பார்க்கலாம். நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சம் வேர், சந்தனக் கட்டை, பேய் புடல், கோரை கிழங்கு, சுக்கு, மிளகு, பப்படம் புல் ஆகியவற்றை சம அளவு எடுத்து, பொடித்துக் கொள்ளவும். நிலவேம்பு குடிநீர் பொடி தயார்.
செய்முறை : 2 டேபிள் ஸ்பூன் பொடியை, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவேண்டும். இது கால் லிட்டராக சுண்டிய பிறகு அருந்தலாம். கசப்பு சுவையாக இருப்பதால், அப்படியே குடிப்பவர்கள் குடிக்கலாம். தேவைப்படுபவர்கள் சிறிது பனங்கற்கண்டை சேர்த்துக் குடிக்கலாம்.
விதிமுறைகள் : தினந்தோறும் ஒரு முறை 7 நாட்களுக்குப் பருகவேண்டும். அன்றைய நாள் முழுவதும் சைவ உணவுகளைச் சாப்பிடவும். நிலவேம்பு குடிநீர் குடித்த பின், ½ - 1 மணி நேரம் கழித்து எளிதாக செரிக்கக்கூடிய சைவ உணவுகளைச் சாப்பிடலாம் நிலவேம்பு குடிக்கும் நாளில் அசைவ உணவுகள், பாகற்காய், அகத்திக்கீரை தவிர்க்கவும்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!