Tamilnadu
5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வானிலை நிலவரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.
இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால் குமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதி மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதி மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு இயல்பை விட 15% அதிகமாகப் பெய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!