Tamilnadu
5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வானிலை நிலவரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.
இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால் குமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதி மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதி மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு இயல்பை விட 15% அதிகமாகப் பெய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Also Read
-
“ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் கோயிலை கட்டுவோம்...” - அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்ச்சை பேச்சு!
-
நீலகிரி செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. வனத்துறை விதித்த புதிய கட்டுப்பாடு - முழு விவரம் இங்கே !
-
12-ம் வகுப்புத் தேர்வில் சாதித்த ஒரே ஒரு திருநங்கை மாணவி... நேரில் சந்தித்து பாராட்டிய கனிமொழி எம்.பி !
-
“மோடி அரசுக்கு தோல்வி உறுதியாகி விட்டது - பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்”: எச்சரித்த ஆசிரியர் கி.வீரமணி!
-
குஜராத், உ.பி-யில் இருந்தே போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகிறது: தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு!