Tamilnadu
“அடுத்த செமஸ்டர் முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் மதிப்பீடு” - அண்ணா பல்கலை. துணைவேந்தர் அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் கிளம்பிய நிலையில், அடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் திருத்தப்படும் என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சூரப்பா பேசியதாவது, “அடுத்த பருவத்தேர்வு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள்கள் திருத்தப்படும்.
சீர்மிகு பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு உரிய நிதியை மாநில அரசு வழங்க வேண்டும்.
என் அமெரிக்க பயணத்தின் போது அங்குள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுவது குறித்து பேசி உள்ளேன். அதுகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்” என்று அவர் தெரிவித்தார்.
Also Read
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!
-
“மே 4ஆம் தேதி உழைப்பிற்கான பலன் கிடைக்கும்... நல்லாட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!