Tamilnadu
“அடுத்த செமஸ்டர் முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் மதிப்பீடு” - அண்ணா பல்கலை. துணைவேந்தர் அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் கிளம்பிய நிலையில், அடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் திருத்தப்படும் என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சூரப்பா பேசியதாவது, “அடுத்த பருவத்தேர்வு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள்கள் திருத்தப்படும்.
சீர்மிகு பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு உரிய நிதியை மாநில அரசு வழங்க வேண்டும்.
என் அமெரிக்க பயணத்தின் போது அங்குள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுவது குறித்து பேசி உள்ளேன். அதுகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்” என்று அவர் தெரிவித்தார்.
Also Read
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!