Tamilnadu
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா குடும்பத்துடன் பதுங்கல்? - மும்பைக்கு விரைந்தது தனிப்படை!
சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா, நீட் தேர்வின் மூலம் தேனி மருத்துக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். அண்மையில் அக்கல்லூரி முதல்வருக்கு அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
அதில், உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தற்போது மருத்துவம் படித்து வருவதாக புகைப்பட ஆதாரத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக, உதித் சூர்யா தலைமறைவானார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக உள்ள உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் குடும்பத்துடன் தலைமறைவாகினர். இந்த ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து முறையாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனையடுத்து, உதித் சூர்யாவின் நண்பர்கள்,வெங்கடேசனின் உறவினர்கள் என அனைவரிடத்திலும் தனிப்படை போலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா மும்பையில் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலிஸார் மும்பை விரைகின்றனர்.
மேலும், அதிகாரிகளுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற டிஜிபியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”