Tamilnadu
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா குடும்பத்துடன் பதுங்கல்? - மும்பைக்கு விரைந்தது தனிப்படை!
சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா, நீட் தேர்வின் மூலம் தேனி மருத்துக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். அண்மையில் அக்கல்லூரி முதல்வருக்கு அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
அதில், உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தற்போது மருத்துவம் படித்து வருவதாக புகைப்பட ஆதாரத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக, உதித் சூர்யா தலைமறைவானார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக உள்ள உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் குடும்பத்துடன் தலைமறைவாகினர். இந்த ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து முறையாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனையடுத்து, உதித் சூர்யாவின் நண்பர்கள்,வெங்கடேசனின் உறவினர்கள் என அனைவரிடத்திலும் தனிப்படை போலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா மும்பையில் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலிஸார் மும்பை விரைகின்றனர்.
மேலும், அதிகாரிகளுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற டிஜிபியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!