Tamilnadu
நாங்குநேரி – விக்ரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, “தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.” என அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, செப்டம்பர் 23-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும். வேட்பு மனுதாக்கல் செய்யவேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30-ம் தேதி. அதன்பின்பு வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.
மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3-ம் தேதி கடைசி நாள் எனவும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அக்டோபர் 24-ம் தேதி வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறை முறைகளும் உடனடியாக அமல்படுத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளையும் சுனில் அரோரா அறிவித்தார்.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!