Tamilnadu
நாங்குநேரி – விக்ரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, “தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.” என அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, செப்டம்பர் 23-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும். வேட்பு மனுதாக்கல் செய்யவேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30-ம் தேதி. அதன்பின்பு வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.
மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3-ம் தேதி கடைசி நாள் எனவும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அக்டோபர் 24-ம் தேதி வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறை முறைகளும் உடனடியாக அமல்படுத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளையும் சுனில் அரோரா அறிவித்தார்.
Also Read
-
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துலாம் தேவை இல்ல... - நெத்திப்போட்டில் அடித்த ஒன்றிய பாஜக அரசு! - விவரம்!
-
மகளிர் இட ஒதுக்கீடு : “வரவேற்றாலும், எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்!” - அதிரடி காட்டிய முதலமைச்சர்!
-
இனிதே நிறைவுற்ற பேச்சுவார்த்தை... திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
வேறு பெண்ணுடன் உறவு... தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிமுக பிரமுகர் மீது புகார்!