Tamilnadu
உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி : சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்!
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்.ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட தற்போது திகார் சிறையில் உள்ளார். அவரி கைது நடவடிக்கை பா.ஜ.க அரசின் திட்டமிட்ட அரசியல் பலிவாங்கள் என நாடுமுழுவது காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் முடியும் தருவாயில் உள்ள போது கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி முருகன் மத்திய பாஜக அரசைக் கண்டித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கிழே விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டத்தாக கூறியுள்ளனர்.
இதயநோயாளியான முருகன் உண்ணாவிரம் இருந்ததால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே காங்கிரசின் முக்கிய நிர்வாகி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!