Tamilnadu
வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் சிவில் நீதிபதியாக தேர்வு பெற இலவச பயிற்சி : பார்கவுன்சில் அறிவிப்பு!
கிராமப்புற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சட்டம் பயின்றவர்கள், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு தங்களை தயார் செய்ய ஏதுவாக இலவச பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த இலவச பயிற்சி வகுப்பானது வரும் செப்டம்பர் 23ம் தேதி அன்று சென்னையில் உள்ள பார் கவுன்சில் அரங்கில் மாலை 4 மணிக்கு தொடங்கப்படுகிறது. இலவச பயிற்சியில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் ஆன்லைன் மூலமாகவும் வகுப்பில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் தங்களை தயார்படுத்தி தேர்வில் வெற்றி பெற தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறியுள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் நாங்கள்தான் ஜெயிப்போம்! நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
'ஸ்டாலின் தொடரட்டும் ; தமிழ்நாடு வெல்லட்டும்' - திருச்சியில் தொடங்கியது தி.மு.க-வின் 12-வது மாநில மாநாடு!
-
ரூ.21.72 கோடியில் முதல்வர் படைப்பகங்கள், பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
Vulgar Warriors.. எப்படி மக்களை காப்பாற்றுவார்? - விஜயை வெளுத்து வாங்கிய தவெக ரஞ்சனா நாச்சியார்!
-
ஈரான்- இஸ்ரேல் போர் எதிரொலி : சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்... உயரும் டீ விலையால் அதிர்ச்சி!