Tamilnadu
பிறந்த குழந்தையின் உடலில் 20 நாட்களாக கிடந்த ஊசி... தொடரும் அரசு மருத்துவமனையின் அலட்சியம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பச்சிளம் குழந்தையில் உடலில் மருந்து ஊசி சிக்கி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 20ம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மலர்விழி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது குழந்தைக்கு இடது கையிலும், கால் தொடையிலும் 2 தடுப்பூசிகள் போடப்பட்டது.
ஊசிப் போட்டப்பிறகு, குழந்தை தொடர்ந்து அழுத நிலையிலேயே இருந்துள்ளது. இருப்பினும் 31ம் தேதி மலர்விழி தனது குழந்தையுடன் வீடு திரும்பினார். அதனையடுத்து, குழந்தையின் அழுகை நின்றப்பாடில்லை. குறிப்பாக, குழந்தை இடப்புறமாக திரும்பி படுக்கையில் கூச்சலிட்டு அழுதுள்ளது.
இதனையடுத்து, குழந்தையை பாட்டி குளிப்பாட்டும் போது, அவரது கைது ஏதோ குத்தியது போன்று தெரிந்துள்ளது. அதன் பிறகு ரத்தம் வந்ததும் அதிர்ச்சி அடைந்த பாட்டியும், உறவினரும், குழந்தையின் காலுக்குள் ஊசி இருந்துள்ளதை கண்டனர்.
மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றதும், அங்கு மருத்துவர் குழந்தையின் உடலில் இருந்த ஊசியை அகற்றி சிகிச்சை அளித்து வருகிறார். அப்போதுதான் குழந்தைக்கு தடுப்பூசி போடும் போது ஊசி சிக்கியுள்ளது தெரிய வந்ததுள்ளது.
அதன் பிறகு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சிய போக்கு குறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் குழந்தையின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல், சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்றுள்ள இளைஞரின் ரத்தம் ஏற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும், அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்த சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!