Tamilnadu
மதுரையில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு: 5 ரவுடிகள் கைது!
மதுரை மாவட்டம் வைகை தென்கரை பகுதியில், தெப்பக்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன், காவலர் அன்பு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் ஆட்டோவில் வந்த 5 ரவுடிகள் குடி போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்டு எச்சரிக்கை விடுத்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் மீது ரவுடிகள் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, வானத்தை நோக்கி சிவராம க்ருஷ்ணன் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் ராஜீவ் கணேஷ் உள்ளிட்ட 5 ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
Also Read
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!