Tamilnadu
மதுரையில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு: 5 ரவுடிகள் கைது!
மதுரை மாவட்டம் வைகை தென்கரை பகுதியில், தெப்பக்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன், காவலர் அன்பு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் ஆட்டோவில் வந்த 5 ரவுடிகள் குடி போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்டு எச்சரிக்கை விடுத்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் மீது ரவுடிகள் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, வானத்தை நோக்கி சிவராம க்ருஷ்ணன் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் ராஜீவ் கணேஷ் உள்ளிட்ட 5 ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
Also Read
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!