Tamilnadu
சாலையில் கிடந்த ரூ.3 லட்சம் பணம்: போலிஸில் ஒப்படைத்த இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு!
சென்னை க்ரீம்ஸ் சாலையில் முருகேசன் நாயக்கர் காம்ப்ளக்ஸ் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள பணம் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனைக் கண்ட வியாசர்பாடியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அரி நாராயணன் (21), மத்திய கைலாஷ் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (24) ஆகிய இரு இளைஞர்களும் ஆயிரம் விளக்கு பகுதி காவல் நிலையத்தில் அந்த பணத்தை ஒப்படைத்துள்ளனர்.
பணத்தை பிரித்துக்கூட பார்க்காமல் போலிஸாரிடம் ஒப்படைத்த இரண்டு இளைஞர்களையும் காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியதோடு விட்டுவிடாமல் கெளரவிக்கவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலையில் கிடந்த பணம் யாருடையது என்றும், சட்டத்துக்கு புறம்பானதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!