Tamilnadu
சாலையில் கிடந்த ரூ.3 லட்சம் பணம்: போலிஸில் ஒப்படைத்த இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு!
சென்னை க்ரீம்ஸ் சாலையில் முருகேசன் நாயக்கர் காம்ப்ளக்ஸ் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள பணம் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனைக் கண்ட வியாசர்பாடியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அரி நாராயணன் (21), மத்திய கைலாஷ் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (24) ஆகிய இரு இளைஞர்களும் ஆயிரம் விளக்கு பகுதி காவல் நிலையத்தில் அந்த பணத்தை ஒப்படைத்துள்ளனர்.
பணத்தை பிரித்துக்கூட பார்க்காமல் போலிஸாரிடம் ஒப்படைத்த இரண்டு இளைஞர்களையும் காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியதோடு விட்டுவிடாமல் கெளரவிக்கவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலையில் கிடந்த பணம் யாருடையது என்றும், சட்டத்துக்கு புறம்பானதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!