Tamilnadu
சாலையில் கிடந்த ரூ.3 லட்சம் பணம்: போலிஸில் ஒப்படைத்த இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு!
சென்னை க்ரீம்ஸ் சாலையில் முருகேசன் நாயக்கர் காம்ப்ளக்ஸ் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள பணம் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனைக் கண்ட வியாசர்பாடியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அரி நாராயணன் (21), மத்திய கைலாஷ் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (24) ஆகிய இரு இளைஞர்களும் ஆயிரம் விளக்கு பகுதி காவல் நிலையத்தில் அந்த பணத்தை ஒப்படைத்துள்ளனர்.
பணத்தை பிரித்துக்கூட பார்க்காமல் போலிஸாரிடம் ஒப்படைத்த இரண்டு இளைஞர்களையும் காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியதோடு விட்டுவிடாமல் கெளரவிக்கவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலையில் கிடந்த பணம் யாருடையது என்றும், சட்டத்துக்கு புறம்பானதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!