Tamilnadu
எச்சில், பான் மசாலா போன்றவற்றை பொது இடங்களில் துப்பினால் அபராதம் : நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை!
மேலைநாடுகளில் சாலையோரத்தில் எச்சில் துப்பினாலோ, சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் ஏதேனும் செயலில் ஈடுபட்டாலோ உடனடியாக அபராதம், சிறை போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டு வருவது வழக்கம்.
அதேபோல், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளார்.
இதற்கு முன்பாக, நீலகிரியில் 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக 70 இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம்கள் நிறுவப்பட்டது.
இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுடனான கூட்டத்துக்குப் பின்னர் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புகையிலை, பான், குட்கா, வெற்றிலை பாக்கு போன்றவற்றை துப்பினாலும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பால் நீலகிரி மாவட்டத்தை தூய்மையாக வைத்திருப்பதோடு, சுற்றுப்புறத்திற்கும் பாதுகாப்பாக அமையும் என இயற்கை ஆர்வலர்கள், சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!
-
போதைப் பொருட்களை பதுக்கிய அதிமுக ஜெயக்குமாரின் உறவினர் கைது : போலிஸ் அதிரடி!
-
வெறுப்பு பேச்சு - பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய Instagram!
-
”சமூகநீதியை பறிக்கும் மோடியின் தனியார்மயம்” : ராகுல் காந்தி MP விமர்சனம்!