Tamilnadu
மாணவிகளை வீட்டுக்கு அழைக்கக்கூடாது : பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு!
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது அண்மைக்காலமாக பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் சென்னை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களோ, மாணவிகளோ கல்வி தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேராசிரியர்களை அவர்களது இல்லத்தில் சந்திப்பது அல்லது, அவர்களை பேராசிரியர்கள் தங்களது இல்லத்துக்கு அழைப்பது ஆகியவை நடந்தேறி வருகின்றன.
இதுபோன்ற செயல்களால் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதால் , இனி பேராசிரியர்களின் வீட்டுக்கு கல்வி தொடர்பாக மாணவர்கள் செல்லவோ, பேராசிரியர்கள் மாணவர்களை அழைக்கவோ கூடாது என தடை விதித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக பேராசிரியர் ரீடா ஜான் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!