Tamilnadu
மலிவு விலை வீட்டு மனைகள்; காசா கிராண்ட் நிறுவன விளம்பரத்தை நம்ப வேண்டாம்- காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை
சென்னையில் வீடு அல்லது மனை வாங்குவதை மக்கள் கனவாக கொண்டுள்ளனர். இதனால் சில வீட்டுமனை விற்பனை நிறுவனங்கள் மக்களின் ஆசையை தங்களுக்கான வியாபாரமாக மாற்றி, விவகாரமுள்ள நிலங்களை விற்றுத் தீர்த்து வருகின்றன. இதனால் பல்வேறு சட்ட சிக்கலுக்கு மக்களும் ஆளாகின்றனர்.
அதிலும், சந்தையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையை விட, மலிவான விலையில் வீட்டு மனைகளை மோசடி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த வகையில், சென்னையை அடுத்த தாழம்பூரில் தள்ளுபடி விலையில் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படுகிறது என பிரபல காசா கிராண்ட் தனியார் நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.
இதில் வில்லங்கம் என்னவென்றால், காசா கிராண்ட் விளம்பரப்படுத்தியுள்ள இந்த வீட்டுமனை பிரிவுகள் அனைத்தும் அரசின் விசாரணை வளையத்திற்குள் உள்ளது. இது தொடர்பாக ஏதும் தெரியாமல் அந்த நிலங்களை மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், காசா கிராண்ட் நிறுவனம் விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தியுள்ள வீட்டு மனைப்பிரிவு குறித்து அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், தள்ளுபடியில் வீட்டு மனையை வாங்கவுள்ள மக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும், தள்ளுபடி விளம்பரங்களை நம்பி வீட்டு மனைகளை வாங்கினால் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!