Tamilnadu

மாசடைந்த நகரமாக உருமாறிய திருப்பூர்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சித் தகவல்!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப் படி, காற்று, நீர், நிலம் மாசுபாடு குறித்து நாடுமுழுவதும் உள்ள 100 நகரங்களில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தியது.

இதில், தமிழகத்தில் உள்ள திருப்பூர் 70 புள்ளிகளை கொண்டு, மிகவும் மோசமான மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் ஆடை உற்பத்தித் துறையைச் சேர்ந்த சாய சலவை, பிரிண்டிங் நிறுவனங்கள் புதிதாக எந்த விரிவாக்கவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் சாய ஆலைகள், பிரிண்டிங் போன்ற நிறுவனங்களின் லட்சக்கணக்கான இயந்திரங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், வாகன புகையால் பல்வேறு நோய் பாதிப்புகளுடன் வாழ்ந்து வருவதாக, மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.