Tamilnadu
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விசாரணை ஆணையத்தின் நிலை என்ன? தமிழக அரசிடம் பதில் கேட்கும் நீதிமன்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றம் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது மாநில அரசு. இதனால் 13 பேர் பலியாகினர் என ஆவேசமாக வாதாடிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் நீதிபதி அருணா ஜெகதீஷன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து வேதாந்தாவின் வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.
Also Read
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! : வடகிழக்கு பருவமழை குறித்து நேரில் ஆய்வு!