Tamilnadu
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விசாரணை ஆணையத்தின் நிலை என்ன? தமிழக அரசிடம் பதில் கேட்கும் நீதிமன்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றம் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது மாநில அரசு. இதனால் 13 பேர் பலியாகினர் என ஆவேசமாக வாதாடிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் நீதிபதி அருணா ஜெகதீஷன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து வேதாந்தாவின் வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?