Tamilnadu
வெளிநாட்டு பயணத்தின் போது யாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது? - யாரை நம்புவது எனத் தெரியாமல் குழம்பும் எடப்பாடி
அரசு முறை பயணமாக அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஆக.,28 முதல் 14 நாட்களுக்கு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், அவரது பொறுப்பை யார் கவனிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலமைச்சர் பொறுப்பை துணை முதலமைச்சராக உள்ள ஓ.பி.எஸிடம் கொடுக்கப்படுமா அல்லது எடப்பாடியின் நெருக்கமான அமைச்சராக உள்ள வேலுமணி, தங்கமணியிடம் கொடுக்கப்படுமா என்பது அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து, யாரிடம் தன்னுடைய பொறுப்புகளை ஒப்படைப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது எடப்பாடி பழனிசாமியே தனது பொறுப்பினை கவனிப்பார் எனவும், முக்கிய முடிவுகள் தொடர்பாக வெளிநாட்டில் இருந்தபடியே ஆலோசனை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பொறுப்பை யாரிடமாவது கொடுத்தால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும், தேவையில்லாத பிரச்னைகள் உருவாகும் என்பதை மனதில் வைத்து இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!