Tamilnadu
வைகை எக்ஸ்பிரஸுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரசிகர்கள்!
மதுரை முதல் சென்னை வரை தினந்தோறும் 497 கி.மீ தொலைவுக்கு இயக்கப்பட்டு வருகிறது அதிவிரைவு ரயில் சேவையான வைகை எக்ஸ்பிரஸ். தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு விரையும் அனைத்து பயணிகளுக்குமே வைகை எக்ஸ்பிரஸ் ஒரு விமானம்தான்.
தென்னக ரயில்வேயில் முதலில் கண்ணாடி ஜன்னல், நவீன ஜன்னல் போன்ற அம்சங்கள் கொண்டவரப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில்தான். பகல் நேர அதிவிரைவு ரயில் சேவையாக உள்ள வைகை எக்ஸ்பிரஸ், 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது.
நேற்றோடு வைகை எக்ஸ்பிரஸ் தனது ரயில் சேவையில் 42வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இதனையொட்டி, மதுரை சந்திப்பில், பொதுமக்களும், ரயில்வே அதிகாரிகளும் வைகை எக்ஸ்பிரஸுக்கு பூமாலை சூட்டி, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர்.
வைகை எக்ஸ்பிரஸுக்கு வெட்டப்பட்ட கேக்கில், வெளியூருக்கு பணி நிமித்தமாக செல்லும் அனைவரையும் பாதுகாப்பு அழைத்துச் சென்றதற்கு ஆயிரக்கணக்கான கைகளின் சார்பில் லட்சக்கணக்கான நன்றிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Also Read
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!
-
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!
-
வெறும் வாய்ச்சவடால்தான்... 50 நாட்கள் ஆட்சியில் 5 ஆணவப் படுகொலைகள்... அச்சத்தில் மக்கள்!
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!