Tamilnadu
நீலகிரியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை செயல்படுத்த ஆ.ராசா மனு!
டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார் நீலகிரி மக்களவை தொகுதி எம்.பி. ஆ.ராசா.
அப்போது கோவையில் இருந்து நீலகிரிக்கு செல்லும் போக்குவரத்து திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அவற்றை செயல்படுத்தக் கோரி மனு அளித்தார்.
அந்த மனுவில் கோயமுத்தூர் முதல் சத்தியமங்கலம் (65 கிமீ) சாலை, கிழக்கு பைபாஸ் ரோடு (54 கிமீ), கோவை - கரூர் (114 கிமீ), L&T பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாலை போக்குவரத்து பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலருக்கு உயர்த்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆகவே பொருளாதார மேம்பாட்டில் கோவை மாவட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் பங்கு இருக்கிறது.
வர்த்தக ரீதியில் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கோவை போன்ற பகுதிகளின் தரம் உயர்த்தப்படுவதின் மூலம் இலக்கை எட்ட வாய்ப்புள்ளது என்றும் ஆ.ராசா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் நிதின் கட்கரிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
Also Read
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!