Tamilnadu
காணாமல் போன முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல்?
சமூக செயற்பாட்டாளர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
முகிலன் காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காணாமல் போன முகிலனை திருப்பதியில் பார்த்ததாக முகிலனின் பள்ளித் தோழர் சண்முகம் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய முகிலனின் பள்ளித் தோழர் சண்முகம், '' திருப்பதியில் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் காணாமல் போன முகிலனை நேரில் பார்த்தேன். முகிலனை நேரில் பார்த்த தகவலை அவரது மனைவியிடம் கூறினேன் '' என்று தெரிவித்தார். மேலும், ஆந்திர காவல்துறையின் பிடியில் முகிலன் இருப்பதாக அவரது நண்பர் சண்முகம் தெரிவித்தார்.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!