Tamilnadu
காணாமல் போன முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல்?
சமூக செயற்பாட்டாளர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
முகிலன் காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காணாமல் போன முகிலனை திருப்பதியில் பார்த்ததாக முகிலனின் பள்ளித் தோழர் சண்முகம் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய முகிலனின் பள்ளித் தோழர் சண்முகம், '' திருப்பதியில் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் காணாமல் போன முகிலனை நேரில் பார்த்தேன். முகிலனை நேரில் பார்த்த தகவலை அவரது மனைவியிடம் கூறினேன் '' என்று தெரிவித்தார். மேலும், ஆந்திர காவல்துறையின் பிடியில் முகிலன் இருப்பதாக அவரது நண்பர் சண்முகம் தெரிவித்தார்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?