Tamilnadu
காணாமல் போன முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல்?
சமூக செயற்பாட்டாளர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
முகிலன் காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காணாமல் போன முகிலனை திருப்பதியில் பார்த்ததாக முகிலனின் பள்ளித் தோழர் சண்முகம் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய முகிலனின் பள்ளித் தோழர் சண்முகம், '' திருப்பதியில் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் காணாமல் போன முகிலனை நேரில் பார்த்தேன். முகிலனை நேரில் பார்த்த தகவலை அவரது மனைவியிடம் கூறினேன் '' என்று தெரிவித்தார். மேலும், ஆந்திர காவல்துறையின் பிடியில் முகிலன் இருப்பதாக அவரது நண்பர் சண்முகம் தெரிவித்தார்.
Also Read
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !