Tamilnadu
அரசின் கவனத்தை ஈர்க்க ஜூலை 7-ல் போராட்டம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணியில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பிறகு பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், கடந்த ஜனவரி மாதம் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். பின்னர் மாணவர்கள் நலன் கருதி பணிக்குத் திரும்பினோம்.
இருந்தாலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீது அரசு பழிவாங்கும் தொனியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் அவர்களின் பதவி உயர்வும் பறிபோனது. இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அதற்கான பதில் இல்லை என அதிருப்தி தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தின் இன்றைய விவாதத்தின்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லை.
எனவே, வருகிற ஜூலை 7-ம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஈடுபடுவர் எனத் தெரிவித்தார். இதில் ஜாக்டோ ஜியோ தலைவர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், செயலாளர்கள் பங்கேற்பர் எனவும் தெரிவித்தார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!