Tamilnadu
ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுக: சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ வலியுறுத்தல்
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த ஜனவரி மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாணவர்களின் கல்வி நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர். ஆனால், எடப்பாடி அ.தி.மு.க அரசோ, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணியிட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்டதாக 1355 ஆசிரியர்கள், 127 பேராசிரியர்கள் மற்றும் 208 அரசு ஊழியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அவர்கள் பதவி உயர்வு போன்ற அரசின் சலுகைகள் கிடைக்கப்பெறாமல் உள்ளனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் தி.மு.க. உறுப்பினர் சுரேஷ் ராஜன் வலியுறுத்தினார்.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!