Tamilnadu
ஹைட்ரோகார்பன் திட்டம் கட்டாயப்படுத்தப்படாது: T.R.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரமும் அழிவை சந்திக்க நேரிடும் எனக் கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்றைய மக்களவைக் கூட்டத்தொடரின் கேள்விநேரத்தின் போது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் வலுக்கட்டாயமாக தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தாது என பதிலளித்தார்.
இவ்வாறு இருக்கையில், இன்றளவும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, தமிழகத்தில் செயல்படுத்தவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் எனப் பேசியிருந்தார்.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !
-
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : 13 அரசுத்துறைகள்.. குவிந்த பொதுமக்கள்.. தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!