Tamilnadu
ஹைட்ரோகார்பன் திட்டம் கட்டாயப்படுத்தப்படாது: T.R.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரமும் அழிவை சந்திக்க நேரிடும் எனக் கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்றைய மக்களவைக் கூட்டத்தொடரின் கேள்விநேரத்தின் போது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் வலுக்கட்டாயமாக தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தாது என பதிலளித்தார்.
இவ்வாறு இருக்கையில், இன்றளவும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, தமிழகத்தில் செயல்படுத்தவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் எனப் பேசியிருந்தார்.
Also Read
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !