Tamilnadu
ஹைட்ரோகார்பன் திட்டம் கட்டாயப்படுத்தப்படாது: T.R.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரமும் அழிவை சந்திக்க நேரிடும் எனக் கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்றைய மக்களவைக் கூட்டத்தொடரின் கேள்விநேரத்தின் போது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் வலுக்கட்டாயமாக தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தாது என பதிலளித்தார்.
இவ்வாறு இருக்கையில், இன்றளவும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, தமிழகத்தில் செயல்படுத்தவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் எனப் பேசியிருந்தார்.
Also Read
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!