Tamilnadu
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி நியமித்து அரசாணை பிறப்பிப்பு!
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகமும், டி.ஜி.பியாக ஜே.கே.திரிபாதியையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனையொட்டி நேற்று தலைமைச் செயலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இதனையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகத்தை நியமித்து இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல், சட்டம் ஒழுங்கு காவல்துறையின் டி.ஜி.பியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் ஏற்கெனவே 2 ஆண்டுகள் நீட்டித்த நிலையில் அவருடைய பதவிக்காலமும் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
இதனையொட்டி, சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவராக உள்ள ஜே.கே.திரிபாதியை சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!