Tamilnadu
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி நியமித்து அரசாணை பிறப்பிப்பு!
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகமும், டி.ஜி.பியாக ஜே.கே.திரிபாதியையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனையொட்டி நேற்று தலைமைச் செயலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இதனையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகத்தை நியமித்து இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல், சட்டம் ஒழுங்கு காவல்துறையின் டி.ஜி.பியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் ஏற்கெனவே 2 ஆண்டுகள் நீட்டித்த நிலையில் அவருடைய பதவிக்காலமும் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
இதனையொட்டி, சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவராக உள்ள ஜே.கே.திரிபாதியை சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!