Tamilnadu
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி நியமித்து அரசாணை பிறப்பிப்பு!
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகமும், டி.ஜி.பியாக ஜே.கே.திரிபாதியையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனையொட்டி நேற்று தலைமைச் செயலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இதனையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகத்தை நியமித்து இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல், சட்டம் ஒழுங்கு காவல்துறையின் டி.ஜி.பியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் ஏற்கெனவே 2 ஆண்டுகள் நீட்டித்த நிலையில் அவருடைய பதவிக்காலமும் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
இதனையொட்டி, சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவராக உள்ள ஜே.கே.திரிபாதியை சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?