Tamilnadu
துவங்கியது ரயில்களில் தீபாவளி முன்பதிவு : ஜெட் வேகத்தில் காலியானதால் பயணிகள் ஏமாற்றம்!
தீபாவளி ரயில் முன்பதிவு இன்று (ஜூன் 27) துவங்கியது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்ல பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர். தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பதிவு டிக்கெட் முடிவடைந்ததால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வேலை, தொழில், படிப்பு ஆகியவற்றிற்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தங்கியுள்ள மக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.
வழக்கமாக 120 நாட்கள் முன்னதாக ரயில்களில் முன்பதிவு துவங்கும். தீபாவளிக்காக அக்டோபர் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரயிலில் செல்ல ஜூன் 27-ம் தேதி முன்பதிவு செய்யலாம். இந்நிலையில், தீபாவளிக்கு வெளியூர்களுக்குச் செல்ல விரைவு ரயில்களில் டிக்கெட் காலியாகிவிட்டன.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரயில்வே துறை போதிய சிறப்பு ரயில்களை இயக்கவில்லை. லாப நோக்கத்தோடு பிரிமியம் ரயில்களை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை.
இந்த ஆண்டு தீபாவளி முன்பதிவு டிக்கெட் உடனே காலியாகிவிட்டதால் தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!