Tamilnadu
உயர் மின்கோபுரத்துக்கு எதிராக போராட்டம் : தாயை கைது செய்த போலீசிடம் மல்லுக்கட்டிய சிறுமி!
தமிழகத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து விவசாயிகளின் விளைநிலங்கள் மற்றும் பொதுமக்களின் நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நில அளவீடு பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் போகம்பட்டியில் உள்ள விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இதனைக் கண்ட அப்பெண்ணின் மகள், தனது தாயை கைது செய்ததை கண்டிக்கும் வகையில் அழுது புலம்பித் தீர்க்கும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !