Tamilnadu
உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த தாய் கைது : அழுது புலம்பும் சிறுமி! (வீடியோ)
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மின்காந்த அலைகளால் நேரடியாக பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி, உயர்மின் கோபுரங்கள அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களது நல்வாழ்வுக்காகப் போராடும் மக்களை அரசும், காவல்துறையும் அடக்குமுறையைப் பயன்படுத்தி ஒடுக்கி வருகின்றன. பல்வேறு பகுதிகளிலும் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் போலீசாரால் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் போகம்பட்டி பகுதியில், உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய தனது தாயை கைது செய்த போலீசாரிடம் சிறுமி ஒருவர் அழுது புலம்பிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!