Tamilnadu
தங்கத்தின் விலையை முறியடிக்கும் தண்ணீர் விலை... நாடாளுமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் வருத்தம்!
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது சி.பி.எம். உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசினார்.
அப்போது, தமிழகத்தின் பெருநகரமாக உள்ள சென்னையில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் பயன்பாட்டுக்கு தனியார் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரையே நம்பி உள்ளனர்.
பொதுவாக தங்கத்தின் விலையே எப்போதும் உயர்ந்து இருக்கும். ஆனால் தற்போது நிலவும் தட்டுப்பாட்டை பயன்படுத்தி பல தனியார் நிறுவனங்கள் ஏகபோக விலைக்கு தண்ணீரை விற்று வருகின்றனர். தண்ணீரின் விலை தங்கத்தின் விலையை முறியடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், குடிநீர் பிரச்னையால் ஐ.டி. நிறுவனங்களும், பல்வேறு ஹோட்டல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஐ.டி. நிறுவனங்கள் தத்தம் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியும்படியும் அறிவுறுத்தியுள்ளன.
இந்த நிலை நீடிக்காமல் தடுக்கும் வகையில், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தேவையான நீரைப் பெற்று தர வேண்டும் என மத்திய அரசை டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!