Tamilnadu
19,426 அரசு பள்ளி ஆசிரியர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்த அ.தி.மு.க அரசு!
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற நடவடிக்கை செய்வது வாடிக்கை. அதனடிப்படையில், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரை அவரது விருப்பத்திற்கேற்ப ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யும் கலந்தாய்வு நடைபெறும்.
இதற்கிடையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ஜூலை 8 - ஜூலை 15ம் தேதி வரை 5 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, பணி மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஆசிரியர்கள் இணையம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் 19,426 பேரை கட்டாய பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!