Tamilnadu
மெர்சல் பட பாணியில் கமிஷன் வேலை பார்த்த டிரைவர்... சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...
ஈரோடு மாவட்டம் கிராமடை பகுதியைச் சேர்ந்த ரித்திகா (14) சிறுமிக்கு சாலை விபத்தின் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியில் காலில் பிளேட் வைப்பதற்கு பதில் கம்பியை வைத்து சிகிச்சை மேற்கொண்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த மே 20ம் தேதி, இனியன் என்பவர் தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஈரோடு தீயணைப்பு நிலையம் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் மோதியதில், இனியனின் மகள் ரித்திகாவின் காலில் பலத்த அடிபட்டது.
இதனால், மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக 108 ஆம்புலன்ஸை அழைத்த போது, தனியார் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. மருத்துவமனையில் சிறுமியை சோதனை செய்து பார்த்ததில், அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இல்லையெனில், உங்களின் மகளின் எதிர்காலம் நிர்மூலமாகிவிடும் என இனியனிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொருளாதார பிரச்னை என்று தயங்கினால், காப்பீடு உள்ள உங்கள் உறவினர்களின் வாகனம் மோதியதாக சொல்லி எங்களது வழக்கறிஞர் மூலம் பணத்திற்கு ஏற்பாடு செய்துக்கொள்ளலாம் எனவும் சிபாரிசு செய்திருக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த இனியன் மகளின் நலனுக்காக தவணை முறையில் சிகிச்சைக்கு ஆகும் ரூ.75 ஆயிரத்தை செலுத்தியிருக்கிறார்.
அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும், சிறுமி ரித்திகாவுக்கு கால் வலி அதிகரித்திருந்ததால், அதே மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அதில், சிறுமியின் காலில் கம்பி வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் கேள்வி கேட்டபோது, அது மோல்டிங் ப்ளேட் என சாக்கு கூறியுள்ளனர்.
இதனையடுத்து, வேறு மருத்துவமனையில் சோதித்து பார்த்ததில், ஒழுங்கான சிகிச்சை மேற்கொள்ளாததால் சிறுமியின் கால் மேலும் பாதிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளனர். பின்னர் கடுங்கோவத்துக்கு ஆளான பெற்றோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பேசிய சிறுமியின் தாயார், நாங்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு போகச் சொன்னோம். ஆனால், அவரோ இந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டார் என குற்றஞ்சாட்டினார். மேலும், அந்த மருத்துவமனையில் அவசர உதவி மற்றும், அவசர கால சிகிச்சைக்கு என எந்த முறையான வசதியும் இல்லை என்றும் சாடினார்.
Also Read
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!