Tamilnadu
ஜூன் 21க்கு மேல் மழை பெய்யும் - இந்திய வானிலை மையம் தகவல்!
வங்கக்கடலின் வடக்கு பகுதியில் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் ஜூன் 21ம் தேதிக்கு மேல், தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் எனவும், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாமதமாகியுள்ளது என்றும், 15% இடங்களில் மட்டுமே பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடாக மற்றும் தமிழகத்தின் ஒரு சில இடங்கள் போன்ற தென்மாநிலங்களில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை பிற மாநிலங்களுக்கு பரவ இன்னும் ஒரு வாரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஜூன் 25ம் தேதியும், மத்திய மாநிலங்களில் ஜூன் இறுதியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
Also Read
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !