Tamilnadu
ஜூன் 21க்கு மேல் மழை பெய்யும் - இந்திய வானிலை மையம் தகவல்!
வங்கக்கடலின் வடக்கு பகுதியில் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் ஜூன் 21ம் தேதிக்கு மேல், தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் எனவும், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாமதமாகியுள்ளது என்றும், 15% இடங்களில் மட்டுமே பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடாக மற்றும் தமிழகத்தின் ஒரு சில இடங்கள் போன்ற தென்மாநிலங்களில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை பிற மாநிலங்களுக்கு பரவ இன்னும் ஒரு வாரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஜூன் 25ம் தேதியும், மத்திய மாநிலங்களில் ஜூன் இறுதியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!