Tamilnadu
ஜூன் 21க்கு மேல் மழை பெய்யும் - இந்திய வானிலை மையம் தகவல்!
வங்கக்கடலின் வடக்கு பகுதியில் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் ஜூன் 21ம் தேதிக்கு மேல், தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் எனவும், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாமதமாகியுள்ளது என்றும், 15% இடங்களில் மட்டுமே பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடாக மற்றும் தமிழகத்தின் ஒரு சில இடங்கள் போன்ற தென்மாநிலங்களில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை பிற மாநிலங்களுக்கு பரவ இன்னும் ஒரு வாரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஜூன் 25ம் தேதியும், மத்திய மாநிலங்களில் ஜூன் இறுதியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
Also Read
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!