Tamilnadu
தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி மறைவை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலி என சட்டப்பேரவைச் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும், இதற்கான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார்.
ஆகையால் நாங்குநேரி தொகுதி காலியானதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது விக்கிரவாண்டி தொகுதியும் காலி என அறிவிக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் 232 தொகுதிகள் உள்ளன.
எனவே, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி