Tamilnadu
தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி மறைவை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலி என சட்டப்பேரவைச் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும், இதற்கான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார்.
ஆகையால் நாங்குநேரி தொகுதி காலியானதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது விக்கிரவாண்டி தொகுதியும் காலி என அறிவிக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் 232 தொகுதிகள் உள்ளன.
எனவே, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!