Tamilnadu
நீட் தேர்வில் தோல்வி: தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் பலி!
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு எழுதுவதை மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயமாக்கியது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியதில் மொத்தம் 10 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தேர்வாகியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன.
இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் புதுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா, திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா ஆகிய மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்த மாணவிகளின் உயிரிழந்ததற்கான வடுக்கள் மறையும் முன்னரே சேலம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பரத்பிரியன் என்ற மாணவர் நீட் தேர்வில் வெறும் 111 மதிப்பெண் பெற்றதால் தன்னுடைய மருத்துவர் கனவு சிதைந்ததாக எண்ணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றளவும் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதை எவற்றையும் அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!