Tamilnadu
நீட் தேர்வில் தோல்வி: தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் பலி!
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு எழுதுவதை மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயமாக்கியது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியதில் மொத்தம் 10 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தேர்வாகியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன.
இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் புதுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா, திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா ஆகிய மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்த மாணவிகளின் உயிரிழந்ததற்கான வடுக்கள் மறையும் முன்னரே சேலம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பரத்பிரியன் என்ற மாணவர் நீட் தேர்வில் வெறும் 111 மதிப்பெண் பெற்றதால் தன்னுடைய மருத்துவர் கனவு சிதைந்ததாக எண்ணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றளவும் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதை எவற்றையும் அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !