Tamilnadu
நீட் தேர்வில் தோல்வி: தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் பலி!
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு எழுதுவதை மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயமாக்கியது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியதில் மொத்தம் 10 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தேர்வாகியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன.
இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் புதுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா, திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா ஆகிய மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்த மாணவிகளின் உயிரிழந்ததற்கான வடுக்கள் மறையும் முன்னரே சேலம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பரத்பிரியன் என்ற மாணவர் நீட் தேர்வில் வெறும் 111 மதிப்பெண் பெற்றதால் தன்னுடைய மருத்துவர் கனவு சிதைந்ததாக எண்ணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றளவும் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதை எவற்றையும் அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!