Tamilnadu
சென்னை மத்திய கைலாஷ் அருகே சாலையில் மீண்டும் ஏற்பட்ட பள்ளம் : பொதுமக்கள் அச்சம் !
மத்திய கைலாஷ் சிக்னல் சென்னை மாநகரின் முக்கிய சிக்னலாக உள்ளது. சென்னையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதிகளில் மத்திய கைலாஷ் பகுதியும் ஒன்று.ஐ.டி நிறுவனங்கள், ஐ.ஐ.டி மெட்ராஸ்,கவர்னர் மாளிகை என முக்கியமான இடங்களை கொண்டுவிளங்கும் மத்திய கைலாஷ் பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைப்பு சாலையாகவும் உள்ளது.
கடந்த மே மாதம் 27ம் தேதி மத்திய கைலாஷ் சிக்னல் அருகே 8 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. ஏற்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறை சிமெண்ட் கலவையை கொண்டு சரி செய்தனர். இந்நிலையில், நேற்றிரவு அதே இடத்தில் 10 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மத்திய கைலாஷ் பகுதியில் தொடர்ச்சியாக பள்ளம் திடீரென ஏற்படுவதும் அதனை நெடுஞ்சாசாலைத் துறை தற்காலிக சீர்செய்வதுமாக உள்ள நிலையில் நிரந்தமாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே வாகன ஒட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், பள்ளம் காரணமாக அப்பகுதியில் சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!