Tamilnadu
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி : பொதுமக்கள் அதிர்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட ஏறான்துறை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டி மற்றும் அவரது மனைவி சக்தி இருவருக்கும் உடல்நலம் குன்றியதால், சிகிச்சைக்காக ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். செவிலியர்கள் சக்தியை பரிசோதித்து மாத்திரை வழங்கினர்.
தனக்கு வழங்கப்பட்ட மாத்திரையை உடைத்து சாப்பிட முயன்றபோது அதில் சிறிய அளவிலான ஊசி இருந்ததை கண்டு சக்தி அதிர்ச்சியடைந்தார்.
மாத்திரையை உடைக்காமல் சக்தி அதனை உட்கொண்டிருந்தால் அவரது நிலைமை மோசமாயிருக்கும். மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளை மக்களி அச்சக் கண்ணோடு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!