Tamilnadu
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி : பொதுமக்கள் அதிர்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட ஏறான்துறை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டி மற்றும் அவரது மனைவி சக்தி இருவருக்கும் உடல்நலம் குன்றியதால், சிகிச்சைக்காக ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். செவிலியர்கள் சக்தியை பரிசோதித்து மாத்திரை வழங்கினர்.
தனக்கு வழங்கப்பட்ட மாத்திரையை உடைத்து சாப்பிட முயன்றபோது அதில் சிறிய அளவிலான ஊசி இருந்ததை கண்டு சக்தி அதிர்ச்சியடைந்தார்.
மாத்திரையை உடைக்காமல் சக்தி அதனை உட்கொண்டிருந்தால் அவரது நிலைமை மோசமாயிருக்கும். மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளை மக்களி அச்சக் கண்ணோடு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!