Tamilnadu
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி : பொதுமக்கள் அதிர்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட ஏறான்துறை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டி மற்றும் அவரது மனைவி சக்தி இருவருக்கும் உடல்நலம் குன்றியதால், சிகிச்சைக்காக ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். செவிலியர்கள் சக்தியை பரிசோதித்து மாத்திரை வழங்கினர்.
தனக்கு வழங்கப்பட்ட மாத்திரையை உடைத்து சாப்பிட முயன்றபோது அதில் சிறிய அளவிலான ஊசி இருந்ததை கண்டு சக்தி அதிர்ச்சியடைந்தார்.
மாத்திரையை உடைக்காமல் சக்தி அதனை உட்கொண்டிருந்தால் அவரது நிலைமை மோசமாயிருக்கும். மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளை மக்களி அச்சக் கண்ணோடு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!