Tamilnadu
12-ம் வகுப்பு பாடத்தில் இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகள்!
இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில், பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த பாதுகாத்து வந்த நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
12-ம் வகுப்புக்கான தாவரவியல் பாடத்தில் விவசாய ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய பயிர் வகைகளை மீட்டெடுத்தல், பிரிவில் முன்னோடியான நெல் ஜெயராமனின் சாதனைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் நார்மன் இ போலக், சுவாமிநாதன் ஆகியோரின் பணிகளும் இடம்பெற்றுள்ளன.
சமீபத்தில் புற்றுநோயால் காலமான நெல் ஜெயராமன், 150-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மிட்டெடுத்தவர். அவரைப் பற்றி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதாவது “ திருவாரூர் மாவட்டம் அதிரங்கத்தைச் சேர்ந்த நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின், சீடர். ’நமது நெல்லை காப்போம்’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் அரும்பாடுபட்டவர். 2006-ம் ஆண்டு முதல் நெல் ரகங்களை மீட்டு தனது, பண்ணையில் விதை திருவிழாவை நடத்தியவர். சிறந்த இயற்கை விவசாயத்துக்கான மாநில விருதை பெற்றவர். 2015-ம் ஆண்டுக்கான சிறந்த மரபணு காப்பாளர் என்ற தேசிய விருதையும் பெற்றவர். ” என்று பெருமைபடுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !