Tamilnadu
பள்ளி ஆசிரியர்கள் 4,001 பேரின் பதவி உயர்வை ரத்து செய்த அதிமுக அரசு!
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் பெருமளவில் போராட்டம் நடத்தப்பட்டது.
பின்னர், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் என பல்வேறு வகையில் நடவடிக்கை என்ற பெயரில் மன உளைச்சலை அளித்தது எடப்பாடியின் அதிமுக அரசு.
இந்த நிலையில், ஜூன், ஜூலை அரசு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுவதையொட்டி, அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் 4001 பேருக்கான பதவி உயர்வை ரத்து செய்துள்ளது அதிமுக அரசு. இந்த செய்கையை காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்துள்ளதாக ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!