Tamilnadu
பள்ளி ஆசிரியர்கள் 4,001 பேரின் பதவி உயர்வை ரத்து செய்த அதிமுக அரசு!
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் பெருமளவில் போராட்டம் நடத்தப்பட்டது.
பின்னர், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் என பல்வேறு வகையில் நடவடிக்கை என்ற பெயரில் மன உளைச்சலை அளித்தது எடப்பாடியின் அதிமுக அரசு.
இந்த நிலையில், ஜூன், ஜூலை அரசு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுவதையொட்டி, அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் 4001 பேருக்கான பதவி உயர்வை ரத்து செய்துள்ளது அதிமுக அரசு. இந்த செய்கையை காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்துள்ளதாக ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!