Tamilnadu
பள்ளி ஆசிரியர்கள் 4,001 பேரின் பதவி உயர்வை ரத்து செய்த அதிமுக அரசு!
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் பெருமளவில் போராட்டம் நடத்தப்பட்டது.
பின்னர், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் என பல்வேறு வகையில் நடவடிக்கை என்ற பெயரில் மன உளைச்சலை அளித்தது எடப்பாடியின் அதிமுக அரசு.
இந்த நிலையில், ஜூன், ஜூலை அரசு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுவதையொட்டி, அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் 4001 பேருக்கான பதவி உயர்வை ரத்து செய்துள்ளது அதிமுக அரசு. இந்த செய்கையை காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்துள்ளதாக ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
Also Read
-
பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !
-
இங்கிலாந்து வாழ் இந்தியர்களாலும் வெறுக்கப்படும் மோடி!
-
இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!
-
ஆபாச வீடியோ விவகாரம் : பிரஜ்வல் ரேவண்ணா தப்பிக்க உதவியவர் யார்? மோடி மௌனத்தை குறிப்பிட்டு D.ராஜா கேள்வி!
-
பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !