Tamilnadu
தமிழகத்துக்கான நீரை திறக்க ஆணையிடுமா காவிரி மேலாண்மை ஆணையம்?
தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா இடையே நிலவும் காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமும், குழுவும் மாதத்திற்கு ஒருமுறை கூடி தமிழகத்துக்கு சேரவேண்டிய நீர் திறப்பு குறித்து ஆய்வு செய்து உத்தரவிட வேண்டும்
ஆனால், கடந்த 5 மாதங்களாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் விதித்திருந்த நிலையில், கடந்த மே 23ம் தேதி டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், தமிழகத்துக்கான நீரை திறந்துவிட வேண்டும் என்றக் கோரிக்கையை கர்நாடகா நிராகரித்தது. இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் உசேன் தலைமையிலான காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று கூடுகிறது.
இந்த கூட்டத்தில், தமிழகத்துக்கான 9.2 டி.எம்.சி. நீரை ஜூன் மாதம் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!
-
“ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
நெல்லையில் 33 திட்டப்பணிகள் திறப்பு; 45,447 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! : முழு விவரம் உள்ளே!
-
“உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!