Tamilnadu
தமிழகத்துக்கான நீரை திறக்க ஆணையிடுமா காவிரி மேலாண்மை ஆணையம்?
தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா இடையே நிலவும் காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமும், குழுவும் மாதத்திற்கு ஒருமுறை கூடி தமிழகத்துக்கு சேரவேண்டிய நீர் திறப்பு குறித்து ஆய்வு செய்து உத்தரவிட வேண்டும்
ஆனால், கடந்த 5 மாதங்களாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் விதித்திருந்த நிலையில், கடந்த மே 23ம் தேதி டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், தமிழகத்துக்கான நீரை திறந்துவிட வேண்டும் என்றக் கோரிக்கையை கர்நாடகா நிராகரித்தது. இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் உசேன் தலைமையிலான காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று கூடுகிறது.
இந்த கூட்டத்தில், தமிழகத்துக்கான 9.2 டி.எம்.சி. நீரை ஜூன் மாதம் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!