Tamilnadu
மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி !
மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 22 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் நாகராஜன், திமுக வேட்பாளர் இலக்கியதாசனைவிட 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில் இளையான்குடி பி அய்யம்பட்டி 299 பூத்தில் 301 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது. ஆனால் விவிபேடில் 504 என காண்பிப்பதால் திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் விவிபேட்டில் பதிவான வாக்குகளை பரிசோதித்து வருகிறார்..
ஆனால் இது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரம் சட்டமன்ற இடைத்தேர்தல் இயந்திரம் வைத்திருக்கும் அறைக்கு எப்படி வந்தது என்றும் 299-ம் இவிஎம் இயந்திரம் எங்கே என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!