Tamilnadu
மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி !
மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 22 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் நாகராஜன், திமுக வேட்பாளர் இலக்கியதாசனைவிட 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில் இளையான்குடி பி அய்யம்பட்டி 299 பூத்தில் 301 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது. ஆனால் விவிபேடில் 504 என காண்பிப்பதால் திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் விவிபேட்டில் பதிவான வாக்குகளை பரிசோதித்து வருகிறார்..
ஆனால் இது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரம் சட்டமன்ற இடைத்தேர்தல் இயந்திரம் வைத்திருக்கும் அறைக்கு எப்படி வந்தது என்றும் 299-ம் இவிஎம் இயந்திரம் எங்கே என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!