Tamilnadu
மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி !
மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 22 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் நாகராஜன், திமுக வேட்பாளர் இலக்கியதாசனைவிட 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில் இளையான்குடி பி அய்யம்பட்டி 299 பூத்தில் 301 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது. ஆனால் விவிபேடில் 504 என காண்பிப்பதால் திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் விவிபேட்டில் பதிவான வாக்குகளை பரிசோதித்து வருகிறார்..
ஆனால் இது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரம் சட்டமன்ற இடைத்தேர்தல் இயந்திரம் வைத்திருக்கும் அறைக்கு எப்படி வந்தது என்றும் 299-ம் இவிஎம் இயந்திரம் எங்கே என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Also Read
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!
-
”இந்திய இளைஞர்கள் உருவாக்கிய ’காக்ரோச் ஜனதா கட்சி’ - CJP.. அதிரவைக்கும் காரணங்கள்” - முழு விவரம் அறிக!
-
மீண்டும் ‘வந்தே மாதரம்’ முதலில்... தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளிய தவெக அரசு : குவியும் கண்டனம்!