Tamilnadu
மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி !
மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 22 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் நாகராஜன், திமுக வேட்பாளர் இலக்கியதாசனைவிட 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில் இளையான்குடி பி அய்யம்பட்டி 299 பூத்தில் 301 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது. ஆனால் விவிபேடில் 504 என காண்பிப்பதால் திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் விவிபேட்டில் பதிவான வாக்குகளை பரிசோதித்து வருகிறார்..
ஆனால் இது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரம் சட்டமன்ற இடைத்தேர்தல் இயந்திரம் வைத்திருக்கும் அறைக்கு எப்படி வந்தது என்றும் 299-ம் இவிஎம் இயந்திரம் எங்கே என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Also Read
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
-
கொளத்தூர் : 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பாட்டாக்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், திமுக-வுக்கு இது ‘மாநாடு மாதம்!’” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி : ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் !
-
“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!