Tamilnadu
22 தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணாமல் இழுத்தடிப்பு : தி.மு.க புகார்
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்நிலையில், தபால் ஓட்டுகள் எண்ணாமல் இருப்பதால் குளறுபடி நடக்க வாய்ப்புள்ளது என தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தி.மு.க சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது “ சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் தபால் வாக்குகளை எண்ணாமல் இழுத்தடித்து வருகின்றனர். அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இந்த தபால் ஓட்டுகள் எண்ணாமல் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
1000, 2000 வாக்குகள் குறைவாக இருக்கும் பகுதியில் தபால் ஓட்டுகளை எண்ணாமல் இருப்பதன் மூலம் அ.தி.மு.க சூழ்ச்சி செய்ய நினைக்கிறது. இதன் மூலம் தி.மு.க வெற்றியைத் தடுக்க முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் நடைபெறும் 22 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்பாகவே தபால் ஓட்டுக்களை எண்ண வேண்டும்.” என தி.மு.கவின் மனுவில் கூறப்பட்டது.
தேர்தல் அதிகாரியும் இந்த கோரிக்கை மனுவை ஏற்று மின்னணு வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள் தபால் ஓட்டுகளை எண்ண உறுதியளித்ததாக கூறப்படுகிறது,
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!